அரூர் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அரூர் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது, அவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கூக்கடப்பட்டியைச் சேர்ந்த மணி மகன் ராஜசேகர் மீது அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.