பாலக்கோட்டில் சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி சாமியார் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள்

பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி சாமியார் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பாலக்கோடு  அருகே  எர்ரணஅள்ளி சாமியார் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக சாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், அந்த தீர்த்தத்தை பொதுமக்கள் மீது தெளித்தனர். அப்போது பக்தர்கள்  கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.அதனைத் தொடர்ந்து,  ஸ்ரீதேவி,  பூதேவி, சீனிவாசப் பெருமாளுக்கு பால், சந்தனம், குங்குமம் மற்றும் இளநீரால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
பக்தர்களுக்கு கோயில் நிர்வாகக் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com