தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வெள்ளிக்கிழமை பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் அலுவலர் சு.மலர்விழியிடம் தாக்கல் செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் சி.சிவானந்தம் (39), பாப்பிரெட்டிப்பட்டி அருகே குருபரஅள்ளியைச் சேர்ந்தவர். அக் கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ள இவர், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை கட்சி நிர்வாகிகளுடன் வந்து, தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
இதேபோல, அரூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த ருக்மணி தேவி (30), நாம் தமிழர் கட்சி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தருமபுரியில் வெள்ளிக்கிழமை பாமக, பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மூவர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.