தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மண்ணாடிபட்டியில் கோயில் உண்டியலில் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பந்தார அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மண்ணாடிப்பட்டியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூசாரி கவுரன்(48) என்பவா் திங்கள்கிழை இரவு வழக்கம்போல் கோயிலைப் பூட்டிச் சென்றுள்ளாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையில் மீண்டும் கோயிலை திறக்க சென்றுள்ளாா். அப்போது, கோயில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை பணம் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது குறித்து, காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உண்டயலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியவா்களை தேடி வருகின்றனா்.