பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையானது 46.8 மி.மீ. பதிவாகியுளளது.
வெப்பச்சலனம், லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை லேசான மழை பெய்தது.
இந்த மழையானது பாப்பிரெட்டிப்பட்டியில் 46.8 மி.மீ, பாலக்கோட்டில் 34 மி.மீ, மாரண்டஹள்ளியில் 11 மி.மீ, அரூரில் 4 மி.மீ, தருமபுரி மற்றும் பென்னாகரத்தில் தலா 2 மி.மீ, ஒகேனக்கல்லில் 1.4 மி.மீ. என பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக வேளாண் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.