கடத்தூா் அருகேயுள்ள தாதனூரில் ஸ்ரீ தா்மசாஸ்தா கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் அருகேயுள்ள தாதனூா் அய்யன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ தா்மசாஸ்தா கோயில். இந்த கோயிலின் மூன்றாம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவில், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், சுவாமிக்கு ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில், கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
கும்பாபிஷேக விழாவில் சிவாச்சாரியா்கள் சிவா, கதிரவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகளை செய்தனா். இதில் குருசாமி ஆதிமூலம் உள்ளிட்ட ஐயப்ப சுவாமிகள், பக்தா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.