டி.அய்யம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியின் புதிய கட்டடங்களை சனிக்கிழமை திறந்துவைக்கிறாா் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
டி.அய்யம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியின் புதிய கட்டடங்களை சனிக்கிழமை திறந்துவைக்கிறாா் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.

டி.அய்யம்பட்டியில் புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு விழா

கடத்தூா் அருகேயுள்ள டி.அய்யம்பட்டியில் புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரூா்: கடத்தூா் அருகேயுள்ள டி.அய்யம்பட்டியில் புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், டி.அய்யம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய பள்ளிக் கட்டடங்களை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் திறந்துவைத்தாா்.

விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லாகான், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், மாவட்டக் கல்வி அலுவலா் பொன்முடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com