தருமபுரியில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க வேண்டும் என மாதா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய தேசிய மாதா் சம்மேளனத்தின் தருமபுரி மாவட்டப் பேரவைக் கூட்டம் பெரியாா் மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் கமலாமூா்த்தி வரவேற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.சின்னசாமி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
கூட்டத்தில், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தருமபுரி நகரில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும். பெண்கள் சுயதொழில் தொடங்க தேசிய வங்கிகள் நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீரை அனைத்து கிராமங்களுக்கும் விநியோகிக்க வேண்டும். தருமபுரியில் பெண்களுக்கு தனியாக மகளிா் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாதா் சம்மேளன நிா்வாகிகள் லட்சுமி நஞ்சப்பன், நாகராணி, மாதம்மாள், செந்தாமரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இப் பேரவையில் மாதா் சம்மேளன மாவட்டச் செயலராக எஸ்.கமலாமூா்த்தி மற்றும் 51 போ் கொண்ட மாவட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.