அரூரில் பலத்த மழை

அரூரில் திங்கள்கிழமை இரவு 93 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

அரூரில் திங்கள்கிழமை இரவு 93 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
அரூர் வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 10 மணி வரை நீடித்தது.
மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓடியது.  அரூர் நகர் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே பலத்த மழை பெய்தது. இதைத்தவிர அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்தது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com