தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை 60 - க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பாரப்பட்டி, தொட்லாம்பட்டி, பிக்கிலி, கொல்லப்பட்டி, பெரியூர், பூதிநத்தம், அம்மன் நகர், புதுக்கரம்பு, தண்டுகாரனஅள்ளி, கூக்குட்ட மருதஅள்ளி, திருமல்வாடி, கிட்டம்பட்டி, வத்திமரதஹள்ளி, பனைக்குளம், நலப்பநாயக்கன அள்ளி, வேப்பில அள்ளி, சொரக்காப்பட்டி, வள்ளூர் காலனி, எட்டியாம்பட்டி, பள்ளிப்பட்டி, கருப்பனஅள்ளி, தட்டாரப்பட்டி, வேலம்பட்டி, மாதேஅள்ளி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி, சிட்லகாரம்பட்டி, ஓ.ஜி.அள்ளி, மாக்கனூர், மங்காப்பட்டி, மன்னேரி, ஆலமரத்துப்பட்டி, பிக்கம்பட்டி, நல்லானூர், தாளப்பள்ளம், குள்ளனூர், பிளியனூர், நாகதாசம்பட்டி, கெளரிசெட்டிபட்டி, கொட்லுமாரம்பட்டி, சின்னபெரமனூர், பி.அக்ரஹாரம், கெட்டூர், நல்லாம்பட்டி, ஆதனூர், பளிஞ்சிரஅள்ளி, ரங்காபுரம், நலப்பரம்பட்டி, சாலை குள்ளாத்திரம்பட்டி, வண்ணாத்திப்பட்டி, மாங்கரை, மோட்டுப்பட்டி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க வாக்குச் சேகரிப்பு...
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் பேரவை தொகுதிகளுக்குள்பட்ட கிராமங்களில் அ.ம.மு.க. சார்பில், போட்டியிடும் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செக்கோடி, பாடி, பூதிப்பட்டி, வேலம்பட்டி, பிக்கிலி, கொல்லப்பட்டி, பெரியூர், திருமல்வாடி, கிட்டம்பட்டி, சஜ்ஜனஅள்ளி, தொட்டம்பட்டி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி, ஓ.ஜி.அள்ளி, ஆமலரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடும் பி.பழனியப்பன், பரிசுப் பெட்டக சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.
தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.பாலு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.