தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரைச் சேர்ந்த மறைந்த தமிழாசிரியர் வெங்கடேசனின் மனைவி மல்லிகா (60) புதன்கிழமை காலமானார்).
கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மல்லிகா, அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஆக.14) பிற்பகல் 1.30 மணியளவில் காலமானார். இவருக்கு, இன்பவள்ளி, கனிமொழி ஆகிய இரு மகள்களும், தருமபுரி தினமணி பதிப்பில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் வெ.முருகமணி என்ற மகனும் உள்ளனர்.
இவரது, இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கம் வியாழக்கிழமை(ஆக.15) காலை 10.30 மணிக்கு கம்பைநல்லூர் மயானத்தில் நடைபெறும். மேலும் தொடர்புக்கு: 70109-79514, 95240-45544.