தருமபுரி, கிருஷ்ணகிரியில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா

தருமபுரி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில், ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில், ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, இண்டூர் மற்றும் பி.அக்ரஹாரத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில், கட்சிப் பார்வையாளர் ராம.சுகந்தன் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதேபோல, தருமபுரி பேருந்து நிலையம் அருகே நகரத் தலைவர் செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர். மேலும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை கொண்டாடினர். இதில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
 அரூரில்...
 அரூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அரூர் கிழக்கு வட்டாரத் தலைவர் ஆர்.சுபாஷ் தலைமை வகித்தார்.
 அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் உருவ சிலைக்கு தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 தொடர்ந்து, அரூர் கச்சேரிமேடு மற்றும் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
 இதில், நகரத் தலைவர் கே.கணேசன், மாவட்ட துணைத் தலைவர் வேடியப்பன், கட்சி நிர்வாகிகள் வைரவன், சிவலிங்கம், மோகன், செல்வம், முருகேசன், ஆறுமுகம், பெருமாள், சகுந்தலா, நாகஜோதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 கிருஷ்ணகிரியில்...
 கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்த நாள் விழாவுக்கு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்து, ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் வின்சென்ட், வட்டாரத் தலைவர் பன்னீர் செல்வம், வழக்குரைஞர் காசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 போச்சம்பள்ளியில்...
 காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 முன்னதாக ராஜீவ்காந்தி உருவ சிலைக்கு நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர், விழாவுக்கு வட்டார தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சத்தியசீலன், முனுசாமிநாயுடு, கோவிந்தன், குமார், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இதில் தனபால், மூர்த்தி, ஞானம், கோவிந்தசாமி, யாரப்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் நாகராஜ் வரவேற்றார். வட்டார செயலாளர் ஞானம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com