காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரியில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்து பேசினார். முன்னாள் எம்.பி. தீர்த்தராமன், நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ப.சிதம்பரத்தை விடுதலை செய்ய வேண்டும். ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைக்கு அனுமதி மறுக்கும் தருமபுரி நகர காவல் நிலையத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com