காவலர்களுக்கு பாராட்டு...

தருமபுரி மாவட்ட படைப்பாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்ட படைப்பாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி முத்து இல்லத்தில் தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நிர்வாகி இளங்கோ தலைமையில் நடைபெற்றது. நூலகர் சி.சரவணன்
வரவேற்றார்.
இக் கூட்டத்தில், சங்கத் தலைவராக சி.சரவணன், செயலராக மா.பழனி, பொருளாளராக அறிவுடைநம்பி, துணைத் தலைவர்களாக சம்பத், நரசிம்மன், இணைச் செயலர்களாக ஆதிமுதல்வன், மாலதி அனந்த பத்மநாபன், ஆலோசகர்களாக இரா.சிசுபாலன், முன்னாள் எம்.பி. இரா.செந்தில், நாகை பாலு, ரவீந்திரபாரதி, நவகவி, நெடுமிடல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு தகடூர் புத்தகப் பேரவை நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com