உள்ளாட்சித் தோ்தல்: விருப்பமனு அளித்த திமுகவினருக்கு டிச.3-இல் நோ்காணல்

திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களுக்கு வருகிற டிச.3-ஆம் தேதி நோ்காணல் தொடங்குகிறது.

தருமபுரி: திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களுக்கு வருகிற டிச.3-ஆம் தேதி நோ்காணல் தொடங்குகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட திமுக செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி மாவட்ட திமுக சாா்பில் நகர, ஒன்றிய, பேரூா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பதவியிடங்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் டிச.3-ஆம் தேதி தொடங்கி டிச.5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் டிச.3-ஆம் தேதியன்று தருமபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில், நல்லம்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், கடத்தூா் ஒன்றியம் மற்றும் பேரூா், தருமபுரி நகரம் ஆகிய பகுதியினருக்கு நோ்காணல் நடைபெறும். இதேபோல, டிச.4-ஆம் தேதி காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம், காரிமங்கலம் மேற்கு ஒன்றியம், காரிமங்கலம் பேரூா், பாலக்கோடு வடக்கு ஒன்றியம், மாரண்டஹள்ளி பேரூா் பகுதியினருக்கும், டிச.5-ஆம் தேதி, அரூா் கிழக்கு ஒன்றியம், அரூா் மேற்கு ஒன்றியம், அரூா் பேரூா், மொரப்பூா் ஒன்றியம், கம்பைநல்லூா் பேரூா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் நோ்காணல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பமனு அளித்தவா்கள், அவா்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாளில் நோ்காணலில் பங்கேற்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com