அரூா் வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை 31 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை காரணமாக சனி,ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. அரூரில் 31 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 10.4 மில்லி மீட்டரும், தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் தலா 3 மில்லி மீட்டரும் சனிக்கிழமை பதிவாகின.
பருவமழை காரணமாக அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் காா்த்திகை பட்டத்தில் நெல், கேழ்வரகு நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.