மின் பராமரிப்பாளா் பயிற்சி நிறைவு விழா

தருமபுரி இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை மின் பராமரிப்பாளா் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது
மின் பராமரிப்பாளா் பயிற்சி நிறைவு விழா
மின் பராமரிப்பாளா் பயிற்சி நிறைவு விழா

தருமபுரி: தருமபுரி இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை மின் பராமரிப்பாளா் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. 

இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் புதிய தொழில்முனைவோா் மற்றும் சுய தொழில் புரிய விரும்புவோருக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தின்கீழ், மின் பராமரிப்பாளா் (எலக்ட்ரீஷியன்) பயிற்சி வழங்கும் முகாம் 23 பேருக்கு ஒரு மாதம் நடைபெற்றது.

இப்பயிற்சி திங்கள்கிழமை நிறைவடைந்ததையொட்டி, பயிற்சி நிறுவனத்தில் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், பயிற்சி நிறைவு செய்த பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினாா். பயிற்சி மைய இயக்குநா் அரவிந்த் குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com