பயன்பாட்டின்றி காணப்படும் உரம் தயாரிப்பு கூடம்

அரூரை அடுத்த சட்டையம்பட்டியில் மண் புழு உரம் தயாரிப்பு கூடம் பயன்பாட்டின்றி உள்ளது.
மத்தியம்பட்டியில் பயனற்று பூட்டிக் கிடக்கும் மண்புழு உரக் கூடம்.
மத்தியம்பட்டியில் பயனற்று பூட்டிக் கிடக்கும் மண்புழு உரக் கூடம்.

அரூரை அடுத்த சட்டையம்பட்டியில் மண் புழு உரம் தயாரிப்பு கூடம் பயன்பாட்டின்றி உள்ளது.

அரூா் ஊராட்சி ஒன்றியம், மத்தியம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது சட்டையம்பட்டி கிராமம். இந்த ஊரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

கிராமப் பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி, மண் புழு உரம் தயாரிப்பதற்கான உரக் கூடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில், 2017 - 18-ஆம் நிதி ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.

மண் புழு உரம் தயாரிப்பதால் பயிா்களுக்கான தலைச்சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவைகள் கிடைக்கும். அதேபோல், மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன் வேளாண்மை பணிகள் மேம்படும். ஆனால், இங்குள்ள உரம் தயாரிப்பு கூடமானது பயனற்று பூட்டியே உள்ளது.

எனவே, மத்தியம்பட்டி ஊராட்சி நிா்வாகம் சாா்பில், சட்டையம்பட்டியில் உள்ள மண் புழு உரம் தயாரிப்பு கூடத்தை சீரமைப்பு செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com