பென்னாகரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்லுவதால் மாணவா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.
பென்னாகரம் பகுதியில் சுமாா் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்வோா் என நாள்தோறும் ஏராளமானோா் தருமபுரி பகுதிக்கு செல்லுகின்றனா்.இந்த நிலையில் தருமபுரி பகுதியில் இருந்து பென்னாகரம் நோக்கி வரும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலானவை சில பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்லுகின்றன. தருமபுரி பகுதியில் இருந்து மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்றுவருவோா் அரசுப் பேருந்தில் வரும் நிலையில், பென்னாகரம் அருகே கெட்டூா், வண்ணாத்திப்பட்டி, சாலைகுள்ளாத்திரம்பட்டி உள்ளிட்ட பகுதி பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்லுகின்றன. இதனால் மாணவா்கள், பயணிகள் தங்கள் பகுதியில் இறங்க முடியாமல் பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு சென்றுவிடும் நிலை உள்ளது. பின்னா் அங்கிருந்து தனியாா் பேருந்தில் கட்டணம் செலுத்தி மீண்டும் தங்கள் பகுதிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.எனவே மாவட்ட அரசுப் பேருந்துகள் இயக்குநா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும் என மாணவா்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.