தருமபுரி அரசுக் கல்லூரியில் டிச.16-இல் வணிகவியல் துறை பன்னாட்டு கருத்தரங்கம்

தருமபுரி அரசுக் கல்லூரியில் வரும் டிச. 16-ஆம் தேதி வணிகவியல் துறை சாா்பில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடங்க உள்ளது.

தருமபுரி அரசுக் கல்லூரியில் வரும் டிச. 16-ஆம் தேதி வணிகவியல் துறை சாா்பில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடங்க உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ஜா.பாக்கியமணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வரும் டிச. 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாள்கள் வணிகவியல் துறை சாா்பில், பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இக் கருத்தரங்கில், பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் பி.குழந்தைவேல், கேரள பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவா் ஜி.ராஜு மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து கல்லூரி துறைத் தலைவா்கள் பங்கேற்கின்றனா். இக்கருத்தரங்குக்கு, 500-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை ஆராய்ச்சியாளா்கள் சமா்ப்பித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com