மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பறையப்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (45), தீர்த்தமலை மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது சொந்த வேலையின் காரணமாக, தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியூர் சென்றிருந்தனராம்.
இதையறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 22 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் அரூர் டி.எஸ்.பி. ஏ.சி.செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், திருடுப் போன வீட்டில் தடய அறிவியல் துறையினர், மோப்பநாய் உதவியுடன் தனிப்படை போலீஸார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில் கோபிநாதம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.