தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாளை அதிமுகவினர் உற்சாகமாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாளை அதிமுகவினர் உற்சாகமாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.
தருமபுரி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றி வேல், அதிமுக அவைத் தலைவர் நாகராஜ், நகரச் செயலாளர் குருநாதன், துணைத் தலைவர் பூக்கடை ரவி, நகர்மன்ற முன்னாள் தலைவர் சுமதி, இலக்கிய அணிச் செயலாளர் தகடூர் விஜயன், முன்னாள் எம்எல்ஏக்கள் சிங்காரம்,  குப்புசாமி, ஒன்றியச் செயலாளர்கள் பெரியண்ணன், பிரகாசம்,கோவிந்தசாமி, குமார், நிர்வாகி பொன்னுவேலு, அண்ணா தொழிற் சங்க நிர்வாகி பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
தருமபுரி நகர்ப்புற பேருந்து நிலையம் அருகே மருத்துவ முகாமும், தருமபுரியில் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் விழாவும் நடைபெற்றன. தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். 
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற விழாவுக்கு அதிமுக நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.அசோக்குமார் எம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர்  ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்கள், தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். 
இந் நிகழ்வில் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் செல்வம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளர் ஏ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தார். பர்கூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி, நில வள வங்கி தலைவர் சாகுல்அமீது, நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம், தொகுதி செயலாளர் திருஞாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை நான்கு முனை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் உருவச்சிலை, ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகளை வழங்கினர். ஒன்றிய பொருளாளர் சேட்டுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில்:  ஊத்தங்கரையில் அமமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு அக் கட்சியின் மாவட்ட பொருளாளர் வி.ரத்தினம் தலைமை வகித்தார். ஊத்தங்கரை தெற்கு ஒன்றியச் செயலாளர் சிவமணி, வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.எ.அருணகிரி , மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் சிவக்குமார்,நகரச் செயலாளர் வி.சுரேஷ், மாவட்ட விவசாயஅணி இணை செயலாளர் ராதா, நகர பொருளாளர்  சிவபிரகாசம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்ட செயலாளர் எஸ்.கணேசகுமார் எம்.ஜி.ஆர், பெரியார் சிலை,அம்பேத்கர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  கிளை செயலாளர் ரமேஸ், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பர்கூர்
பர்கூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவுக்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.  
தொடர்ந்து 71 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி, அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்வில் முன்னாள் எம்பி சி.பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளர் மாதையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பர்கூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்கில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com