அரூரை எடுத்த எச்.தொட்டம்பட்டி ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார். மழைநீர் சேகரிப்பு, புவி வெப்பம் அடைதல், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்தல், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு வகையிலான அறிவியல் படைப்புகளை பள்ளி மாணவ, மாணவிகள் கண்காட்சியில் வைத்திருந்தனர். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி இணைச் செயலர் தமிழ்வாணன், இயக்குநர்கள் கிருஷ்ணன், முருகேசன், பள்ளி முதல்வர் கார்த்திகேயன், துணை முதல்வர் சிலம்பரசன், பொறுப்பாளர்கள் கந்தசாமி, வெற்றி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.