தேசிய அளவிலான பேட்மின்டன்: தமிழக அணிக்கு வெள்ளிப் பதக்கம்

தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டியில் தமிழக அணியினர் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.


தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டியில் தமிழக அணியினர் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், ஒளரங்காபாத்தில் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 19-வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் தமிழக மாணவர்கள் சித்தார்த், கோகுல், சத்தியமூர்த்தி, சித்தார்த், தஷ்வின் ஆகியோர் பங்கேற்று விளையாடினர். இதில் தமிழக மாணவர்கள் 2-ஆம் இடத்துடன் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
இதையடுத்து, பேட்மின்டன் போட்டியில் தேசிய அளவில் 2-ஆம் இடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பழனிதுரை, வேடியப்பன் ஆகியோரை தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தைவேல், பொன்முடி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெ. முத்துகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி மாணவிகள் சாதனைழாவில் மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கும் கல்லூரி முதல்வர் க. அருள், செயலர் ராஜி.
ஊத்தங்கரை, ஜன. 12: தேசிய அளவில் நடைபெற்ற சட்ட உரிமைகள் போட்டியில் வெற்றி பெற்ற ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவில் சட்ட உரிமைகள் விழிப்புணர்வு போட்டி அண்மையில் நடைபெற்றது. ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 16 பேர் கலந்து கொண்டனர். அதில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் மாணவி எஸ். பவித்ரா இரண்டாம் பரிசும், முதுகலை முதலாம் ஆண்டு இயற்பியல் மாணவி எஸ். மகிசாமர்த்தினி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான இப் போட்டியில் 225 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் க. அருள், செயலர் ஆர்.பி. ராஜீ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com