ஜன.19-இல் நியாய விலை கடைகளில் குறைகேட்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் வருகிற ஜன.19-ஆம் தேதி நியாய விலைக் கடைகளில் வட்டார அளவிலான குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வருகிற ஜன.19-ஆம் தேதி நியாய விலைக் கடைகளில் வட்டார அளவிலான குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் நுகர்வோருக்கு முறையாக பொருள்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் வட்ட அளவிலான குறைகேட்பு முகாம்கள் வரும் ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
தருமபுரி வட்டத்தில், சின்னத் தடங்கம் நியாயவிலைக் கடை, பென்னாகரம் வட்டத்தில் நாயக்கனஅள்ளி, பாலக்கோடு வட்டத்தில், குத்தலஅள்ளி, அரூர் வட்டத்தில் கீழானூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அதிகாரப்பட்டி, நல்லம்பட்டி வட்டத்தில் இருசன்கொட்டாய் மற்றும் காரிமங்கலம் வட்டத்தில் நாகனம்பட்டி ஆகிய நியாயவிலைக் கடைகளில் இம் முகாம்கள் நடைபெறும்.
பொதுமக்கள், இம் முகாம்களில் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் "1077' மற்றும் 8903891077 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com