அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலராக ர.ரவிக்குமார்
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பினை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, தருமபுரி மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலர் ர.ரவிக்குமார், கட்சியின் தலைமை நிலையச் செயலர் பி.பழனியப்பன், மாவட்டக் கழகச் செயலர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.