ஜூலை 16-இல் அரசுக் கல்லூரியில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் சேர வரும் ஜூலை 16-இல் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் சேர வரும் ஜூலை 16-இல் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) ஜா.பாக்கியமணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்டமேற்படிப்பில் காலியாக உள்ள இடங்களில் மாணவ, மாணவியர் சேர வரும் ஜூலை 16-இல் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மேலும், எம்.ஏ. வரலாறு, எம்.காம்., எம்.காம். கூட்டுறவு, எம்.காம். (சிஏ) மற்றும் எம்.எஸ்.சி. மின்னணுவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு போதிய விண்ணப்பங்கள் பெறப்படாததால், தற்போது அதற்கான விண்ணப்பங்கள் வழங்கி சேர்க்கை நடைபெறும்.
அதேபோல, 2018-19-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறாமல், துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை இளநிலை, இளமறிவியல், இளம் வணிகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை 19-ஆம் தேதி மாலை 5.40 மணிக்குள் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com