தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 தேர்வை 8,611 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு முழுவதும் குரூப்-1-க்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற தேர்வை 3,130 பேர் எழுதினர்.
தருமபுரி மாவட்டத்தில் 7,076 பேர் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5,481 பேர் 22 மையங்களில் தேர்வை எழுதினர். தேர்வாளர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், குடிநீர், மின் விசிறி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தேர்வர்கள் தேர்வு அறைக்குள் கைபேசி, மின்னனு சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.