மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக உலக பசுமை பாதுகாப்பு கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் தேசியத் தலைவர் ராஜ ராஜ சோழன் சீனிவாச படையாட்சி வெளியிட்ட செய்தியறிக்கை: வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு உலக பசுமை பாதுகாப்பு கட்சி ஆதரவு அளிப்பது, அக் கட்சியின் வெற்றிக்காக புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யப்படும். இதற்கான தீர்மானம் கட்சியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.