அமமுக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா

ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.


ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு நகரச் செயலர் வி.சுரேஷ் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலர் சிவமணி, வடக்கு அருணகிரி, மாவட்ட விவசாய அணி இணைச் செயலர் ராதா, இளைஞர் பாசறை இணைச் செயலர் ரமேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலர் ரவிச்சந்திரன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்பித்தார். முன்னதாக நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com