துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டிய கணவர் கைது

தருமபுரியில் கைத்துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டியவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


தருமபுரியில் கைத்துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டியவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சேலத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தனது மனைவி தருமபுரி நெடுமாறன் நகரைச் சேர்ந்த உமாவிடம் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 
இந்த நிலையில், சனிக்கிழமை நெடுமாறன் நகருக்கு வந்த கர்ணன் மனைவியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது,  ஆத்திரமடைந்த கர்ணன் கைத்துப்பாக்கியைக் காட்டி உமாவை மிரட்டினாராம். இதுகுறித்து உமா அளித்த புகாரின் பேரில் தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com