வாகனச் சோதனையில் ரூ.1.28 லட்சம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வாகனச் சோதனையில் ரூ.1.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வாகனச் சோதனையில் ரூ.1.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கோடு  அருகே உள்ள ஆரத அள்ளி கூட்டுச்சாலை பகுதியில், உதவித் தேர்தல் அலுவலர் முருகேசன் தலைமையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
இதில், காவேரிப்பட்டணத்திலிருந்து பாலக்கோடு நோக்கி வந்த, மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இச்சோதனையில்,  பாலக்கோட்டைச் சேர்ந்த அமானுல்லா (46) என்பவர் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, பாலக்கோடு சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com