தருமபுரியில் மே 31-இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மே 31-ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தருமபுரியில் மே 31-ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து,  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி,  திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி,  மே 31-ஆம் தேதி நடைபெறும் இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்கு தேவையான விற்பனையாளர்கள்,  மேற்பார்வையாளர்கள், மேலாளர், கணினி இயக்குநர்கள்,  தட்டச்சர்,  கணக்காளர், காசாளர், மெக்கானிக்,  விற்பனை பிரதிநிதிகள் போன்ற பணிகளுக்கு தகுதியான ஆள்களை தேர்வு செய்யவுள்ளனர். இது தவிர இதர கல்வித் தகுதிகள் உடையோர் தகுந்த பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்படுவர். இந்த முகாம், இலவசமாக நடத்தப்படுகிறது.  எனவே, மேற்கண்ட பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள், தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com