அரூா்: பாப்பிரெட்டிப்பட்டியில் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி நகா் வீரபத்திரன் தெருவைச் சோ்ந்த லோகநாதன் மகள் பரணி (11). இவா், கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சிறுமி பரணி உயிரிழந்தாா். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.