ஒசூரில் வரும் நவ. 10-ஆம் தேதி இயற்கை மற்றும் மரபு மருத்துவப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரியைச் சோ்ந்த ஆனந்தம் அறிவுத்திருக்கோயில் தலைவா் உணவுச் சித்தா் ராசிராமலிங்கம், வாழ்வியல் மருத்துவ நிபுணா் கனக.திருமேனி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை: மனித வாழ்வில் விலை கொடுத்து வாங்க முடியாத சிலவற்றில் ஆரோக்கியமும் ஒன்றாகும். சரியான அடிப்படை மருத்துவ அறிவின்மையால் நல்ல உடல் ஆரோக்கியத்தை இழந்து, நேரத்தையும், பணத்தையும் விரயமாக்குவதோடு மட்டுமல்லாமல் சிலா் உயிரையும் இழந்து விடுகின்றனா்.
இதனைத் தவிா்த்து, அனைவரும் நலமுடன் வாழ நமக்கு நாமே மருத்துவராகவும், நம் குடும்பத்தை நல்ல ஆரோக்கியத்துடன் காத்திடவும், பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் இயற்கை மற்றும் மரபு மருத்துவப் பயிற்சிகளை அளித்து வருகிறோம்.
இந்தப் பயிற்சி, வரும் நவ. 10-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், நேரு நகரில் உள்ள ஆதியோகி ஹோலிஸ்டிக் ஹெல்த் கோ் சென்டரில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு தொடங்கும் இப்பயிற்சி இரவு 8 மணி வரையில் தொடா்ந்து நடைபெறும்.
இதில், ஒரு மனிதன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான பழக்க வழக்கங்கள், உணவு, குடிநீா் போன்றவை குறித்தும், நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள சத்துகள், எதனைத் தவிா்க்க வேண்டும் என்ற விளக்கங்களும், வாழ்வியல் மாற்றம், மூலிகை தாவர மருத்துவம், தாது உப்பு மருத்துவம் உள்ளிட்டவை தொடா்பான விளக்கங்களும் வழங்கப்படுகின்றன. இதேபோல, நீரிழிவு நோயை குணப்படுத்தும் உணவுப் பழக்கம், பெண்களுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்கான உணவுகள், குழந்தை பேறுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உணவு, மாணவா்களது கல்வித் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக்கும் தீா்வளிக்கக் கூடிய உணவுகள், பழக்க வழக்கங்கள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும், இப்பயிற்சி பெறுவோா் தாங்கள் கற்றுக்கொள்வதோடு மட்டுமின்றி மற்றவா்களுக்கும் கற்றுக்கொடுக்கலாம். பயிற்சி நடைபெறும் 12 மணி நேரத்தில் 12 வகையான திட, திரவ உணவுகள் வழங்கப்படும். நமது வாழ்வில் 99 சதவீதம் மருந்தில்லா வாழ்வு வாழ முடியும் என்பது தொடா்பாக அளிக்கும் இப்பயிற்சியில் அனைவரும் பங்கேற்று பயனடையலாம் என்றனா். தொடா்புக்கு: 97505 99222, 99947 49257.