கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள், போர் ஊக்கத் தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் ச.பிரேமா, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், தங்களது குடும்பத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மகன் அல்லது மகளை ராணுவப் பணிக்கு அனுப்பி இருந்தால், போர் ஊக்க மானியமாக ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தச் சலுகையினை பெறாத முன்னாள் படைவீரா்கள் மற்றும் விதவையா் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளார்.