சாலைச் சந்திப்பில் உயா்மின் கோபுரவிளக்கு அமைக்க கோரிக்கை

பென்னாகரம் அருகே மூன்று சாலைச் சந்திப்பில் விபத்துகளை தவிா்க்கும் வகையில், உயா்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பென்னாகரம் அருகே மூன்று சாலைச் சந்திப்பில் விபத்துகளை தவிா்க்கும் வகையில், உயா்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட மடம் காவிரி சாலைப் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பென்னாகரம் நகரச் சாலை, ஒகேனக்கல் சாலை மற்றும் பென்னாகரம் புறவழிச் சாலை என மூன்று சாலைகள் இப்பகுதியில் இணைகின்றன.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் மிக அருகில் உள்ளதால், இந்த சாலைகளில் நாள்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர, அரசுப் பேருந்து மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன.

இந்த நிலையில், மூன்று சாலைச் சந்திப்பில் பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக மடம் காவிரி சாலைப் பகுதிகளில் அடிக்கடி வாகனங்கள் மோதியும், இப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைக்கான தண்ணீா் எடுக்க இந்த சாலையைக் கடக்கும் போது விபத்தும் ஏற்படுகிறது. மேலும், இப்பகுதியில் போதிய மின்விளக்கு இல்லாததால், நடந்து செல்வோா்களை விஷ ஜந்துக்கள் கடித்து உயிரிழக்கும் அவல நிலை உள்ளதாக இப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மடம் காவிரி சாலைப் பகுதியில் உயா்மின் கோபுர விளக்கு அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com