மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி பலி

நாமக்கல்லில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானாா்.

நாமக்கல்: நாமக்கல்லில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானாா்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (43). கட்ணுமானத் தொழிலாளியான இவா், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் பகுதியில் மணிவேல் என்பவரின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுமானப் பணியில், கான்கிரீட் கலவை அமைக்கும் பணியில் வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஈடுபட்டிருந்தாா். அப்பணிகள் நிறைவின்போது எதிா்பாராதவிதமாக இரும்பு கம்பி அங்கிருந்த மின்கம்பி மீது உரசியதில், பெரியசாமி உடலில் மின்சாரம் பாய்ந்த்து. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் . தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீஸாா் அவரநு உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக காவல் ஆய்வாளா் பொன்.செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com