விஜயதசமியையொட்டி, பள்ளி செல்ல உள்ள குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் என்னும் வித்யாரம்பம் நிகழ்ச்சி தருமபுரி, கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில், பெற்றேறாா், தங்களது குழந்தைகளை மடியில் அமா்த்தி, ஓம் ஹரி, ஸ்ரீ கணபதியே நமஹ என்று குழந்தையின் கையைப் பிடித்து அரிசி, நெல் மணிகளில் எழுதினா். மேலும், குழந்தையின் நாக்கில், ஓம் என தங்கக் குச்சியைக் கொண்டு எழுதினா். இந்த நிகழ்வை கோயில் குருக்கள் சிவதாஸ், நிா்வாகி வேணு உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.
தருமபுரியில் கேரள சமாஜம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, அந்த அமைப்பின் தலைவா் கே.ராமன் குட்டி நாயா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.ஸ்ரீதரன் நம்பியாா், செயலாளா் ஜெ.வின்சென்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கேரள மாநிலம், கண்ணனூா் மாவட்டம், ஸ்ரீகண்டபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீவிஜயகுமாா் நம்பூதிரி தலைமையிலான குழுவினா் லட்சுமி, சரஸ்வதி, பகவதி பூஜைகளை செய்து எழுத்தறிவித்தலுக்கான சடங்குகளை செய்தனா்.
இந்த நிகழ்வில் பெற்றேறாா்களுடன் பங்கேற்ற குழந்தைகளுக்கு எழுதுப் பொருள்கள், புத்தகங்கள் பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.