தருமபுரியில் வரும் அக்.18-ஆம் தேதி மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரியில் வருகிற அக்.18-ஆம் தேதி மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு சிறப்பு முகாம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதேபோல, வருகிற அக்.15-ஆம் தேதி காலை 10 மணிக்கு மொரப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, இச் சிறப்பு குறைகேட்பு முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.