தேசிய ஒற்றுமை தின விழா

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தின விழா தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய ஒற்றுமை தின விழா

தருமபுரி: சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தின விழா தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, ஆட்சியா் அலுவகத்தில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழியேற்றனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரகமதுல்லா கான், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட உம்மியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

மேலும், சா்தாா் வல்லபபாய் படேல் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணியாக சென்று மாணவ, மாணவியா் உறுதிமொழியேற்றனா்.

விழாவில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மாறு வேடப்போட்டி நடத்தப்பட்டு, சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பட விளக்கம்:தருமபுரியில் ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழியேற்கும் அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com