தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தேசிய ஊட்டச்சத்து உறுதிமொழியேற்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.பழனிசாமி தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஊட்டச்சத்து பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர். இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தமிழ்தென்றல், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.