தருபுரியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.ரங்கராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.மோகன், மாவட்டத் தலைவர் பசுபதி மற்றும் 900 பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஓய்வூதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பண்டிகைக் கால முன்தொகை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.