அரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அரூர் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் அசோக் (43). இவர், தனியார் மசாலா நிறுவனத்தின் முகவராக உள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் உள்ள தனது மாமியார் இறந்த துக்க நிகழ்வுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
இதையடுத்து, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, பணம் ரூ. 1 லட்சம் மற்றும் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.