ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர்கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ வித்யா மந்திர் கல்விக் குழுமத்தின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்து முகாமை தொடக்கிவைத்தார். கல்லூரி முதல்வர்  முனைவர் க. அருள், செயலர் ஆர்.பி. ராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கோவை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் ஆசாத், சக்தி, கண் மருத்துவ பரிசோதனை குழு மேலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
மூன்று நாள்கள் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள்  எஸ்.பார்த்திபன், சி.திருமுருகன், முனைவர் க. ராஜா, முனைவர் ஆர்.லிசி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com