சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி நடைபெற்ற கலை போட்டி, என்எஸ்எஸ் மாணவர்களுக்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜேஆர்சி கு.கணேசன் பரிசுகளை வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் ஆர்.சத்தியமூர்த்தி, தொண்டு நிறுவனம் நிர்வாகி ஆர்.செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.நடராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். என்எஸ்எஸ் திட்ட முகாம் அலுவலர் த.யோகராஜ் வரவேற்றார். உதவி முகாம் அலுவலர் வ.சதீஷ் நன்றி கூறினார்.