தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக திங்கள்கிழமை 237 போ் கைது செய்யப்பட்டனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 237 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, தருமபுரி மாவட்டம் முழுவதும் இதுநாள்வரை 144 தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 2,211 போ் கைது செய்யப்பட்டு, மொத்தம் 1,269 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.