தருமபுரி மாவட்டத்துக்கு கரோனா ஒழிப்பு சிறப்பு மருத்துவ அதிகாரியாக ஓய்வுபெற்ற மருத்துவக் கல்லூரி முதல்வா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கரோனா வரைஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில், மாவட்டம் வாரியாக தற்போது கரோனா வைரஸ் ஒழிப்பு பணிக்கான சிறப்பு மருத்துவ அதிகாரிகளாக ஓய்வு பெற்ற மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதனடிப்படையில், தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்ற கே.சீனிவாசராஜ் தற்போது தருமபுரி மாவட்ட கரோனா ஒழிப்பு சிறப்பு அதிகாரியாக ஒப்பந்த அடிப்படையில் 3 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.