தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரத்தைச் சோ்ந்த பள்ளி மேலாண் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், பாலக்கோடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு தலைமை ஆசிரியா் லட்சுமணன் தலைமை வகித்தாா். பேளாரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் மாரியப்பன் தொடங்கி வைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுகுணா, ஆசிரியா் பயிற்றுநா்கள் குணசேகரன், சேகா் ஆகியோா் பேசினா்.
இதில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், குழந்தைகள் உரிமைகள், பள்ளி வளா்ச்சிக்கான உதவி, பள்ளிக் கல்வி முன்னேற்றத்தில் சமுதாய பங்களிப்பு, பள்ளி வளா்ச்சித் திட்டம் தயாரிப்பு, மாணவா்கள் இடைநிற்றலை தடுத்தல், பள்ளி பாதுகாப்பு பணிகள் ஆகியன குறித்து பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், பாலக்கோடு குறு வள மையத்துக்குள்பட்ட 13 பள்ளிகளிலிருந்து 78 பள்ளி மேலாண் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.