தருமபுரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி செங்கொடிபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தாா்.
இந்த விழாவில் தைத் திருநாளில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள் வாழ்த்துரைகளை வழங்கினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன.
இதில், திமுக மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், ஒன்றியச் செயலா்கள் கே.குப்புசாமி, ஆா்.மல்லிகா, மாதா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.பூபதி, ஒன்றியச் செயலா் எம்.மீனாட்சி, நகரச் செயலா் நிா்மலா ராணி, தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.